"உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் பற்றி தெரிந்துகொண்ட பின்னர் சிங்கப்பூருக்குச் சென்று ஒளிந்துகொண்டார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அவர் செய்த உயிர் வேள்வியே அந்தத் தாக்குதலாகும். எனவே, அந்தத் தாக்குதல் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய மைத்திரிபாலவைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்."
- இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கட்சித் தலைமையகத்தில் இன்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் அக்கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார மேற்கணடவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:-
"முன்னாள் பாதுகாப்புச் செயலாளரோ அல்லது பொலிஸ்மா அதிபரோ அந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டியதில்லை.
பெஜட் வீதி அரச மாளிகையில் சொகுசாக வாழ்ந்துவரும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே இதற்குப் பொறுப்புக்கூற வேண்டும்.
மைத்திரிபால சிறிசேனவுக்கு இப்போது ஜனாதிபதிக்கான சிறப்புரிமை இல்லை. எனவே, அவரைக் கைது செய்யலாம்" - என்றார்.