இந்தியாவின் 71-ஆவது குடியரசு தின விழாவில் டெல்லி ராஜபாதையில் நடந்துவரும் அணிவகுப்பில் முதல்முறையாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் செயற்கைக் கோள் பாதுகாப்பு ஏவுகணை காட்சிப்படுத்தப்பட்டது.
அதேபோல் சின்னூக் ஹெலிகப்டர்கள், அமெரிக்காவிடம் இருந்து கொள்வனவு செய்ப்பட்ட அப்பாச்சி ஹெலிகப்டர்கள் ஆகியவையும் இடம் பெற்றிருந்தன.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு முதன்முதலில் ஏ-சாட் ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதனை செய்தது.
ஏ-சாட் ஏவுகணை பூமியின் குறைந்த நீள்வட்டப் பாதையில் இருக்கும் எதிரி செயற்கைக்கோள்களைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.
நொடிக்கு 11.கிமீ வேகத்தில் செல்லும் திறன் படைத்த ஏ-சாட். எதிரிநாட்டுச் செயற்கைக்கோளை மிகமிக துல்லியமாகத் தாக்கி அழிக்கும் தன்மை கொண்டதாகும்.
அதேபோல சமீபத்தில் விமானப்படையில் சேர்க்கப்பட்ட சின்னூக், அப்பாச்சி ஹெலிகாப்டர்களும் அணிவகுப்பில் இடம் பெற்றிருந்தன.
சின்னூக் ஹெலிகப்டர்கள் விமானப்படைக்குத் தேவையான பொருட்களைக் கொண்டு செல்லுதல், மீட்புப்பணி போன்றவற்றுக்காக உருவாக்கப்பட்டதாகும்.
அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்ட அதிநவீன அப்பாச்சி ஹெலிகப்டர்கள் போர்க்காலத்தில் பயன்படக்கூடியவையாகும்.
இந்த ஹெலிகப்டரில் இருந்து சிறியரக ராக்கெட்டுகளை ஏவ முடியும். ஹெலிகப்டர் முகப்பில் அதிநவீனத் துப்பாக்கி, ரடார் கருவிகள் என்பன அடங்கியுள்ளன.