71 ஆவது ஆண்டு இந்திய குடியரசு தின நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக வளாகத்தில் இடம்பெற்றது.
இந்திய துணை தூதரகத்தின் துணைத்தூதுவர் சங்கர் பாலச்சந்தர் அவர்கள் குடியரசு நாளில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
முன்னதாக இந்தியத் துணைத் தூதுவர் பலாலியில் அமைந்துள்ள இந்தியஅமைதிப்படையின் நினைவாலயத்தில் யாழ் கட்டளைத் தளபதி ருவான் வணிக சூரியவுடன் இணைந்து மலர் அஞ்சலிசெலுத்தினார். நிகழ்வில், தூதரகஅலுவலர்கள், வடமாகாணத்தில் வசிக்கும் இந்தியகுடிமக்கள் மற்றும் இந்தியவம்சாவழியினர், இந்தியநலன் விரும்பிகள்,ஊடகவியலாளர்கள் என100ற்கும் மேற்பட்டபலரும் கலந்துகொண்டனர்.