கொரோனா வைரஸ் பாதித்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு வெளிநாட்டவர்கள் தொற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் எனவும், மற்றையவர் பிலிப்பைன்ஸைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று பேருக்கு வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பது முதற்கட்ட மாதிரி பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.