யாழ்ப்பாணம்,பருத்தித்துறை பிரதேச சபையின் ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவர் மீது இன்று இரவு 7 மணியளவில் வரமராட்சி கிழக்கு முள்ளியான் பகுதியில் வைத்து வாள் வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த செபமாலை செபஸ்ரியன் என்பவர் கையில் பலத்த காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இனந்தெரியாத நபர்கள் இவரை வாளால் வெட்டிக் காயப்படுத்திவிட்டு தப்பிச்சென்றனர் எனத் தெரியவருகிறது.