Friday 29th of March 2024 06:47:59 AM GMT

LANGUAGE - TAMIL
அரசுப்பக்கம் தாவும் எண்ணமில்லை! கூட்டணியாக வெற்றிபெறுவதே நோக்கு!

அரசுப்பக்கம் தாவும் எண்ணமில்லை! கூட்டணியாக வெற்றிபெறுவதே நோக்கு!


நாம் ஒருபோது அரசாங்கத்தின் பக்கம் செல்லமாட்டோம். ஐக்கிய தேசி கட்சியின் பிரச்சினையை விரைவில் தீர்த்துக்கொண்டு புதிய கூட்டணியாக தேர்தலுக்கு முகம்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவருமான மனோகணேசன் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பு இன்று கொழும்பு கண்காட்சி பண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டடார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

பொதுத் தேர்தலில் நாங்கள் வெற்றிபெற வேண்டும். அதற்காக அமைக்கும் கூட்டணியில் ஐக்கிய தேசிய கட்சியே பிரதான கட்சியாக இருக்கும்.

அதனால் ஐக்கிய தேசிய கட்சிக்குள் இருக்கும் தலைமைத்துவப்பிரச்சினையை அவர்கள் விரைவாக தீர்த்துக்கொள்ளவேண்டும்.

சிங்கள மக்களை ஏமாற்றி பொய் வாக்குறுதிகளை வளங்கியே தற்போதுள்ள அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்தது. ஆனால் இவர்களின் சுயரூபம் வெளிவந்துள்ளது - என்றார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE