கொரோனா வைரஸ் தொற்றுடன் இந்தியாவில் இரண்டாவது நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய மத்திய அரசு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அறிவித்துள்ளது.
சீனாவில் இருந்து கேரளவுக்கு வந்த மாணவர் ஒருவர் தொற்றுடன் முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளார்ஃ
இந்த நிலையில் சீனாவில் கல்வி கற்று வந்த நிலையில் அண்மையில் நாடு திரும்பிய மற்றொரு மாணவி வைரஸ் தொற்றுக்குள்ளானமை தெரியவந்துள்ளதாக இந்திய மத்திய சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.
அடையாளம் காணப்பட்டுள்ள இரண்டாவது நோயாளி தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிகப்பட்டு வருவதாக இந்தி மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதேவளை, ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் சீனாவுக்கான விமான சேவைகளை இரத்துச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.