யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் ஒரு தெகை கஞ்சா இன்று மாலை விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின்படி குறித்த இடத்தில் இராணுத்தினர் நடத்திய தேடுதலின்போது கஞ்சா பொதி கைப்பற்றப்பட்டு பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உடுத்துறையில் வைத்து கைமாற்றம் செய்யப்படவிருந்த நிலையில் குறித்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.