கிளிநொச்சி பளைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் வீடொன்றில் இருந்து 32 கிலோகஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டுப்பகுதியில் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத்தகவலையடுத்து, இன்று பிற்பகல் வீடொன்றில் இருந்து 32 கிலோகஞ்சா மீட்க்கப்பட்டதுடன் 52 வயடைய சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவரிடம் பளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
குறித்தசந்தேக நபரையும் சான்றுப்பொருளையும் நீதிமன்றில் ஆயர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.