Monday 15th of April 2024 11:10:03 PM GMT

LANGUAGE - TAMIL
ராகுல் சதத்துடன் இந்தியா 296 ஓட்டங்கள் குவிப்பு!

ராகுல் சதத்துடன் இந்தியா 296 ஓட்டங்கள் குவிப்பு!


நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 296 ஓட்டங்களை பெற்றுள்ளது.

நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி களத்தடுப்பை தேர்வு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சார்பில் கே.எல்.ராகுல் சதமடித்து அணியின் ஓட்ட எண்ணிக்கை உயர்வுக்கு காரணமாக இருந்தார். இவருடன் இணைப்பாட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் 62 ஓட்டங்களையும் மனீஷ் பாண்டே 42 ஓட்டங்களையும் தம் பங்கிற்கு பெற்றிருந்தனர்.

பந்து வீச்சை பொறுத்தவரையில் பென்னெற் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

297 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாடிவரும் நியூசிலாந்து அணி அதிரடி தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 4 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 23 ஓட்டங்களை குவித்துள்ளது. ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் மாட்டீன் குப்தில் ஒரு 6 ஓட்டம் இரண்டு 4 ஓட்டங்களுடன் 17 ஓட்டங்களை விளாசியுள்ளார்.


Category: விளையாட்டு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE