யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் சமூகச் சீர்கேடு இடம்பெறுவதாகத் தெரிவித்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் நல்லூர் கோவில் வீதியில் அமைந்துள்ள பிரபல திருமண மண்டபம் மற்றும் அறைகள் வாடகைக்கு விடப்படும் மண்டபம் ஒன்றையே பொலிஸார் சுற்றிவளைத்துத் தேடுதல் நடத்தியிருக்கின்றனர்.
இதன்போதே இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.