Thursday 18th of April 2024 10:28:40 PM GMT

LANGUAGE - TAMIL
பல்கலைக்கழக மாணவன் வீட்டின் மீதான தாக்குதல் - ஆவா செய்திகள் என்ற பெயரில் உரிமை கோரல்!

பல்கலைக்கழக மாணவன் வீட்டின் மீதான தாக்குதல் - ஆவா செய்திகள் என்ற பெயரில் உரிமை கோரல்!


பகிடிவதை விவகாரத்தால் வகுப்புத் தடையை எதிர்கொண்டுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவனின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டது தாமே என ஆவா செய்திகள் 001 என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் உரிமை கோரப்பட்டுள்ளது.

கடந்த இரவு முகத்தினை மறைத்தபடி மானிப்பாயில் உள்ள மாணவனின் வீட்டுக்குச் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் மாணவனை அழைத்ததாகவும் அவர் அங்கு இல்லாத நிலையில் வெளியில் இருந்த காரை அடித்துச் சேதப்படுத்தியதுடன் வீட்டின் தளபாடங்களையும் அடித்து நொருக்கியதாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆவா செய்திகள் என்ற முகநூலில் குறித்த தாக்குதல் தொடர்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

தமிழர்கள் அடையாளமாக காணப்படும் யாழ்பாண பல்கலைக்கழகத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் அனைத்து செயற்பாடுகளுக்கும் எதிராக எமது நடவடிக்கைகள் இடம்பெறும் அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற மாணவ பெண்களுக்கு எதிராக ராக்கிங் மேற்கொள்ளும் நபர் மீது நேற்று தாக்குதல் நடைபெற்றது ராக்கிங் என்ற பெயரில் மாணவர்களுக்கு வேதனை ஏற்படுத்தும் பச்சத்தில் இது போன்ற தண்டனை தொடரும் இனிவரும் காலங்களில் Aava 001 boys

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE