மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரியின் தொழில் நுட்ப கூடத்திற்கான ஒரு தொகுதி தொழிற்பயிற்சி உபகரணங்கள் இன்று வெள்ளிக்கிழமை (14) காலை மன்னார் வேல்ட் விஸன் லங்கா அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் வேல்ட் விஸன் லங்கா அமைப்பின் நிதி உதவியுடன் பெற்றுக் கொள்ளப்பட்ட ஒரு தொகுதி தொழில் நுட்ப பயிற்சி உபகரணங்கள் கையளிக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் ரி.தனேஸ்வரன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை(14) காலை 9 மணியளவில் பாடசாலையில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் மன்னார் வேல்ட் விஸன் லங்கா அமைப்பின் முகாமையாளர் எஸ்.பி.பிறேமச்சந்திரன், திட்ட பணிப்பாளர் எம்.உதயகுமார், மன்னார் வலயக்கல்வி பணிமனையின் பிரதி கல்வி பணிப்பாளர் கே.சுகிர்தன், தொழில் நுட்ப பிரிவு பொறுப்பு ஆசிரியர் துரை ராஜா ஜோன்சன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
அதன் போது மன்னார் வேல்ட் விஸன் லங்கா அமைப்பின் முகாமையாளர் எஸ்.பி.பிறேமச்சந்திரன் தொழில் நுட்ப உபகரணங்களை மாணவர்களிடன் வைபவ ரீதியாக கையளித்தமை குறிப்பிடத்தக்கது.