Friday 29th of March 2024 04:44:11 AM GMT

LANGUAGE - TAMIL
நாடு திரும்பிய   உதயங்க வீரதுங்க சி.ஐ.டியிடம் சிக்கினார்!

நாடு திரும்பிய உதயங்க வீரதுங்க சி.ஐ.டியிடம் சிக்கினார்!


சர்வதேசப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவரும் ராஜபக்ச குடும்பத்தின் உறவினருமான உதயங்க வீரதுங்க இன்று நாடு திரும்பிய நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ரஷ்யாவில் தூதுவராக இருந்தவேளையில் அவர் மிக ரக விமானக் கொள்வனவின்போது பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்கமைய கடந்த ஆட்சியில் அவருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது. எனினும், வழக்கு விசாரணையை எதிர்கொள்ள அவர் இலங்கைக்கு வரவில்லை.

உக்ரெய்னில் சில காலம் தங்கியிருந்த அவர் பின்னர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் தங்கியிருந்தார்.

இதையடுத்து அவர் மீது சர்வதேசப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கும் இடையில் கைதிப் பரிமாற்ற உடன்பாடு இல்லாமை காரணமாக அவரை இலங்கை அரசால் நாடு கடத்துமாறு கோர முடியாமல் இருந்தது.

இந்தநிலையிலேயே அவர் இன்று அதிகாலை மஸ்கட்டில் இருந்து வந்த விமானத்தில் இலங்கை வந்துள்ளார்.

அவரைக் குற்றப் புலனாய்வுத்துறையினர் விமான நிலையத்தில் வைத்துக் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE