தமிழீழ விடுதலை இயக்கமான டெலோவின் 50 ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் கொண்டாடப்படவுள்ளது.
டெலோ இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இடம்பெறவுள்ள இந் நிகழ்வில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசியல்வாதிகளும் கலந்துகொள்ளவுள்ளதுடன் ஆதரவாளர்கள் பொது மக்களையும் கலந்துகொள்ளுமாறும் தமிழீழ விடுதலை இயக்கம் கோரியுள்ளது.