Wednesday 24th of April 2024 11:49:19 AM GMT

LANGUAGE - TAMIL
கருத்தரங்கம் -01 - சிவசக்தி ஆனந்தன்  (நேர்காணல் - காணொளி)

கருத்தரங்கம் -01 - சிவசக்தி ஆனந்தன் (நேர்காணல் - காணொளி)


விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இலங்கை முழுமையிலும் பொதுத் தேர்தல் தொடர்பிலான எதிர்பார்ப்புக்களும் புதிய கூட்டுக்களின் வருகைகளும் அதிகரித்துவருகின்றன.

இந்தச் சூழலில் தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தும் தரப்புக்கள் மும்முனை மோதலில் ஈடுபடத் தயாராகியிருகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகள் தேர்தலை எதிர்கொள்வதற்கான தீவிர செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றன.

இந்நிலையில் கருத்தரங்கம் என்கிற பகுதி ஊடாக அருவி இணையக்குழுமம் மக்கள் மனதில் எழும் கேள்விகளை அரசியல் பிரமுகர்களிடமும் சமூக அக்கறை கொண்டவர்களிடமும், அரசியல் ஆய்வாளர்களிடமும் முன்வைத்து அவர்களின் கருத்துக்களை பகிர்வதற்கு தயாராகியிருக்கின்றது.

முதலாவது கருத்தரங்கத்தில் புதிதாக கூட்டுணைந்துள்ள தமிழ்த் மக்கள் தேசியக் கூட்டணி முக்கியஸ்தர் சிவசக்தி ஆனந்தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

நேர்கண்டவர் அருவி இணையத்துக்காக பி.மாணிக்கவாசகம். தொடர்ந்து ஏனைய கட்சிகளின் பிரமுகர்களின் கருத்துக்களையும் வாசகர்கள் எதிர்பாருங்கள்.


Category: முகப்பு, நேர்காணல்
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE