மெக்சிகோவில் சிறுவர் காப்பகம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 15 சிறுவர்கள் பரிதாபமாக பலியாகினர்.
மெக்சிகோ - போர்ட் அவ் பிரின்ஸ் மாகாணம், ஹைடியன் நகரத்தில் உள்ள ஆதரவற்ற சிறுவர் காப்பகத்திலேயே நேற்று வெள்ளிக்கிழமை இந்தத் துயரம் இடம்பெற்றது.
இரண்டு மாடிகளை கொண்ட இந்தக் காப்பகத்தில் 66 சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
கட்டடம் முழுவதும் தீ திடீரென வேகமாகப் பரவியதால் சிறுவர்கள் வெளியேற முடியாமல் அதற்குள் சிக்கிக்கொண்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் கட்டடத்திற்குள் சிக்கி இருந்த சிறுவர்களை மீட்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.
66 சிறுவர்களில் பலர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டபோதும் 15 சிறுவர்கள் தீயில் கருகியும், தீயால் ஏற்பட்ட புகை மண்டலத்தால் மூச்சுத் திணறியும் உயிரிழந்தனர்.