Thursday 28th of March 2024 07:11:58 AM GMT

LANGUAGE - TAMIL
சகாக்கள் ஆறுபேரை சுட்டுக்கொன்றுவிட்டு தலிபான்களுடன் இணைந்த பொலிஸ்!

சகாக்கள் ஆறுபேரை சுட்டுக்கொன்றுவிட்டு தலிபான்களுடன் இணைந்த பொலிஸ்!


ஆப்கானிஸ்தானில் 2 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 6 பொலிஸாரைச் சுட்டுக்கொன்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு தப்பியோடி தலிபான்களுடன் இணைந்துள்ளார்.

தலிபான்களின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இவர், அவர்களுடன் இணைவதற்கு முன்னரே இவ்வாறு கொடூர செயலில் ஈடுபட்டு தப்பியோடியுள்ளார்.

ஆப்கான் - குண்டூஸ் மாகாணம் இமாம் ஷாகிப் மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே சக பொலிஸாரை இவர் சுட்டுக் கொன்றுள்ளார்.

இதேவேளை, ஆப்கானிஸதான் குண்டூஸ் மாகாணத்தில் நேற்று தலிபான்கள் மேற்கொண்ட மற்றொரு தாக்குதலில் 5 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர்.

அமெரிக்கா மற்றும் தலிபான்களுக்கு இடையேயான அமைதி பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில் தற்கொலைப்படைத் தாக்குதல்களும், குண்டுவெடிப்பு சம்பவங்களும் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE