கொரோனோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை நெருங்கிவரும் அதேவேளை, இதனால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 1,700-ஐ தொடுகிறது.
சீன தேசிய சுகாதார ஆணையகம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வெளியிட்ட உத்தியோபூர்வ தகவல்களின் பிரகாரம் கொரோனா தொற்றுக்கு இலக்காகி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69,107 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,669 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் கொரோனா தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்ட 142 பேர் சீனாவில் உயிரிழந்தனர்.
அத்துடன் நேற்று புதிதாக 2,009 பேர் தொற்றுக்குள்ளாகி இனங்காணப்பட்டுள்ளனர்.