போர்க்குற்றங்களில் ஈடுபட்டமை தொடர்பில் கிடைத்த நம்பிக்கையான ஆதரங்களுக்கு அமைய இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமெரிக்காவுக்குள் பிரவேசிப்பதற்கு அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களம் தடை விதித்துள்ளமைக்கு அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
இவ்வாறான செயற்பாடுகள் மூலம் சோபா போன்ற ஒப்பந்தங்களைக் கையெழுத்திட வைத்து இலங்கையைக் கட்டுப்படுத்த அமெரிக்கா முயற்சிக்கின்றது எனவும் அந்தப் பீடங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
எதிர்காலத்தில் இதே நிலைமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட ஏனைய முக்கியஸ்தர்களுக்கும் ஏற்படலாம் எனவும் அந்தப் பீடங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.