பஞ்சாப் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் தனது மனைவி மைத்துனர், மாமியார் உள்ளிட்ட நான்கு பேரை சுட்டுக் கொலை செய்துவிட்டு பொலிஸில் சரணடைந்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த கொடூர சம்பவத்தில் கொலையாளியான பொலிஸ் அதிகாரியின் மைத்துனரின் 10 வயது மகள் காயமடைந்தார்.
பஞ்சாப் மோகா மாவட்டத்தைச் சேர்ந்த பொலிஸ் கொன்ஸ்டபிள் குல்விந்தர் சிங் என்பவரே நால்வரைச் சுட்டுக் கொன்றவராவார்.
கடமையின் நிமிர்த்தம் அவருக்கு வழங்கப்பட்டிருந்த ஏ.கே.-47 ரக துப்பாக்கியாலேயே நால்வரையும் அவர் சுட்டுக் கொன்றுள்ளார்.
கொன்ஸ்டபிளின் மனைவி ராஜ்விந்தர் கவுர், மாமியார் சுக்விந்தர் கவுர் மற்றும் மைத்துனர் ஜஸ்கரன் சிங்; மைத்துனரின் மனைவி இந்தர்ஜித் கவுர் ஆகியோரே கொல்லப்பட்டவர்களாவர்.
மனைவி உள்ளிட்ட நால்வரைக் சுட்டுக் கொன்று விட்டு சரணடைந்த பொலிஸ் அதிகாரி தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் அதிகரிக்கு அவரது மாமியார் குடும்பத்துடன் நிலத் தகறாறு இருந்து வந்தது. இது குறித்த முரண்பாட்டை அடுத்து அவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் எனத் தெரியவருவதாக மோகா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹார் மன்வீர் சிங் தெரிவித்துள்ளார்.