தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராகத் திகழ்ந்து வரும் இளைய தளபதி விஜய் இன் 65 வது படத்தை இயக்குநர் பார்த்தீபன் இயக்கப்போகின்றார் என சாரப்பட அவர் இட்ட பதில் ருவிட்டால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியிலுள்ளார்கள்.
தளபதி-65 ஐ இயக்கப்போவது யார் என்ற கேள்விக்கு விடையறியும் ஆவல் விஜய் ரசிகர்களிடத்தே அதிகரித்துள்ள நிலையில் விஜய் ரசிகர் ஒருவர் தனது ருவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவுக்கு இயக்குநர் பார்த்தீபன் இட்ட பதில் ருவிட்டே விஜய் ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு காரணமாகும்.
பார்த்தீபன் தயாரித்து, இயக்கி, நடித்த ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படம் பார்த்தீபனுக்கு சிறந்த பாராட்டுகளை பெற்றுக்கொடுத்துள்ளது. அதுமட்டுமில்லாது கோல்டன் குளோப் மற்றும் ஒஸ்கார் கதவுகள் வரை அந்தப் படத்தின் மூலம் பார்த்தீபன் தட்டியுள்ளார்.
இந்த நிலையில் விஜய் ரசிகர் ஒருவர் தனது ருவிட்டர் பதிவில் ‘தளபதி-65ல் பார்த்தீபனும் விஜயும் இணைந்தால் செம மாஸ்’ என பதிவிட்டிருந்தார். இப்பதிவுக்கு கீழே ‘மாஸ_க்கு மாஸ்டரை பிடிக்கும். மாஸ்டருக்கு இந்த நண்பனை பிடிக்கும். (நண்பன் படத்தை என்னையே முதலில் இயக்கச்சொன்னார் - அழகிய தமிழ் மகனுக்கு எழுதச் சொன்னார்) நாளை இன்னும் அடுத்த லெவலில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும்!’ என பார்தீபன் பதிலளித்திருந்தார்.
நாளை நீங்கள் நினைத்தது நடக்கும் என்ற பார்த்தீபனின் இறுதி வரிகள் தான் தளபதி-65 ஐ பார்த்தீபன் தான் இயக்கப்போகின்றார் என்ற மகிழ்ச்சியை விஜய் ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.