Tuesday 16th of April 2024 08:37:16 AM GMT

LANGUAGE - TAMIL
நெல்லியடியில் தங்க நகைகள், வெளிநாட்டுப் பணம் கொள்ளை!

நெல்லியடியில் தங்க நகைகள், வெளிநாட்டுப் பணம் கொள்ளை!


வெளிநாட்டில் இருந்து வந்திருந்தவர்களது வீட்டில் தங்க நகைகள், வெளிநாட்டு நாணயங்கள் என்பன, வீடு உடைத்துக் கொள்ளையிடப்பட்டுள்ளன.

அரசடி, நெல்லியடியில் அமைந்துள்ள வீடொன்றில் வெளிநாட்டில் இருந்து வந்திருந்த குடும்பத்தினர் அவர்களது உறவினர்களுடன் தங்கியிருந்தனர்.

நேற்று காலையில் வீட்டில் இருந்த அனைவரும் கோவிலுக்குச் சென்றிருந்த வேளை, வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது.

இவர்களது 20 பவுண் நகை மற்றும் 1300 யூரோ, 400 ஸ்ரேலிங் பவுண் போன்ற வெளிநாட்டு நாணயங்களும் கொள்ளையிடப்பட்டுள்ளன.

நண்பகல் வீடு திரும்பிய போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து உரிமையாளரால் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE