மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மன்னார் பிரிமீயர் லீக் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் 4 ஆம் நாள் போட்டிகள் நேற்று புதன் கிழமை இரவு 7.30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் மின் ஒளியில் வெகு சிறப்பாக ஆரம்பமானது.
இலங்கை உதை பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளரும், மன்னார் பிரிமீயர் லீக் போட்டியின் குழு தலைவருமான பி.ஞானராஜ் தலைமையில் குறித்த போட்டி ஆரம்பமானது.
குறித்த உதைபந்தாட்ட போட்டியானது மன்னார் தமிழ்ஸ் எப்.சி (MANNAR TAMILS FC) உதைபந்தாட்ட அணிக்கும் அயலன்ட் எப்.சி (ISLAND FC) உதைபந்தாட்ட அணிக்கும் இடையில் போட்டி இடம் பெற்றது.
போட்டி ஆரம்பமாகி 6 ஆவது நிமிடத்தில் அயலன்ட் எப்.சி (ISLAND FC ) உதைபந்தாட்ட அணியின் வீரர் அன்று டிலைக்ஸன் முதலாவது கோலை போட்டார்.
-அதனைத்தொடர்ந்து முடியும் வரை போட்டி விறு விறுப்பாக இடம் பெற்ற அயலன்ட் எப்.சி (ISLAND FC ) உதைபந்தாட்ட அணி 1:0 என்ற கணக்கில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.