Thursday 28th of March 2024 09:54:07 AM GMT

LANGUAGE - TAMIL
ஜேர்மனியில் ஆயுததாரிகள் அட்டகாசம்; நேற்றிரவு எட்டுப் பேர் சுட்டுக் கொலை!

ஜேர்மனியில் ஆயுததாரிகள் அட்டகாசம்; நேற்றிரவு எட்டுப் பேர் சுட்டுக் கொலை!


ஜேர்மனியின் - பிராங்போர்டில் இருந்து 25 கிலோ மீற்றர் தெலைவில் உள்ள ஹனாவு நகரில் இரு வேறு இடங்களில் நேற்று புதன்கிழமை இரவு அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியாகினர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.

ஹனாவு நகரில் உள்ள மதுபான சாலைகளுக்குள் இரவு 10 மணியளவில் புகுந்த ஆயுததாரிகள்; அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதனையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். தேடுதலின்போது சந்நேகநபர் ஒருவர் கைது செய்ய்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, துப்பாக்கிச் சூடு நடந்த பகுதியில் இருந்து கறுப்பு நிற வாகனம் ஒன்று தப்பிச் சென்றதாகவும் இது ஆயுததாரிகள் பயன்படுத்திய வாகனமாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத நோக்கத்துடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

IMAGE_ALT

IMAGE_ALT


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE