அடுத்த 3 ஆண்டுகளுக்கு தான் மிகவும் தீவரமாகவும் இதே உறுதியுடனும் இந்திய அணிக்காக விளையாடுவேன் என்றும் அதனை எவராலும் தடுக்க முடியாது என்றும் விராட் கோலி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்காக அடுத்தடுத்த போட்டிகளில் ஓய்வின்றி தான் மட்டுமின்றி அணி வீரர்களும் விளையாடி வருகின்றோம். கடந்த எட்டு வருடங்களாக வருடத்தில் 300 நாட்களுக்கும் மேல் தான் விளையாட்டிற்காக செலவிட்டு வருவதாகவும் குறிப்பிட்ட கோலி அடுத்த 3 ஆண்டுகளுக்கு இதே தீவரத்துடன் தான் ஆடுவேன் என்றும் தன்னுடைய 34 அல்லது 35 ஆவது வயதில் தன்னுடைய உடல் தான் சொல்வதை கேட்காத போது தான் மாற்றத்திற்கு தயாராவேன் என்றும், அதுவரை கிரிக்கெட்டின் 3வடிவங்களிலும் தான் தொடர்ச்சியாக விளையாடுவேன் என்றும் விராட் கோலி மேலும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, பகுப்பு
Tags: