சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை குறைவடைந்துள்ள நிலையில் அதன் பயனை தற்போது நுகர்வோருக்கு பெற்றுக் கொடுக்க முடியாது எனத் தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் பந்துல குஷவர்தன, இடைக்கால அரசாங்கத்தில் எரிபொருள் மானிய அடிப்படையிலேயே விநியோகிக்கப்படுகின்றது என்றும் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கடந்த அரசாங்கம் எரிபொருளின் விலை தொடர்பில் விலை நிர்ணய சூத்திரத்தை பின்பற்றியது. அதனால் எவ்வித பயனும் நுகர்வேராருக்கு கிடைக்ப்பெறவில்லை.
ஆனால் தற்போது அராங்கம் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் எரிபொருளை மானி அடிப்படையிலேயே வழங்குவதாகவும் இதன்போது அவர் கூறினார்.