ஈரானில் கொரோனா வைரஸ் தாக்கி அடையாளம் காணப்பட்ட 2 பேர் நேற்று உயிரிழந்தனர். இதன்மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் முதல் உயிரிழப்பு சம்பவம் ஈரானில் பதிவாகியுள்ளது.
மேலும் வைரஸ் தொற்றுக்குள்ளான 3 பேர் ஈரான் - ஹிய்ம் நகரம் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
ஹிய்ம் நகரம் ஆன்மீக தலம் என்பதால் அங்கு சீனா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த பயணிகள் பலர் வருகின்றனர். இதனாலேயே கொரோனா வைரஸ் இங்கு பரவியிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து வைரஸ் மேலும் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹிய்ம் நகரில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.