அவுஸ்திரேலியாவில் சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களுக்கிடையில் சேவையில் ஈடுபடும் பயணிகள் ரயில் நேற்று வியாழக்கிழமை இரவு தடம்புரண்டதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
சிட்னியில் இருந்து 160 பயணிகளுடன் மெல்போர்ன் நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்த ரயில் வாலன் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது திடீரென தடம்புரண்டது.
இந்த விபத்தில் 5 பெட்டிகள் தடம்புரண்டதில் ரயில் ஒட்டுநர் மற்றும் உதவி ஓட்டுநர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.