கிளிநொச்சி மாவட்டத்திற்கு இன்று பகல் 3 30 மணிக்க்கு விஜயம் மேற்கொண்ட லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் வடமத்திய மாகாண ஆளுநருமான திஸ்ச விதாரண மற்றும் ரஞ்சித் அபயசேகர ஆகியோர் விவசாயிகள் மற்றும் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது மக்களுக்கான சுத்தமான குடிநீர் விநியோகம், விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஜஸ்வரன் கிளிநொச்சி மாவட்ட கமநலஅபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்