தென் கொரியாவில் நேற்று வெள்ளிக்கிழமை 204 கொரோனா வைரஸ் தொற்று நேயாளர்கள் கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று அந்தத் தொகை இரு மடங்காகியது.
இன்று காலை 142 பேர் கொரோனா வைரஸூடன் இனங்கானப்பட்டதாக தென்கொரிய சுகாதாரத்துறை அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இன்று மாலை மேலும் 87 பேர் தொற்றுக்குள்ளானது கண்டறியப்பட்டது.
அந்தவகையில் இன்று ஒரே நாளில் மட்டும் 229 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை வரை 204 பேர் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்டிருந்தனர்.
இவற்றுடன் தென்கொரியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எணிணிக்கை 433 ஆக அதிகரித்துள்ளது.
டேகு நகரில் இடம்பெற்ற மத பிரார்த்தனை நிகழ்வில் பங்கேற்ற 61 வயது பெண் ஒருவர் மூலமாகவே பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.