Monday 18th of March 2024 10:36:34 PM GMT

LANGUAGE - TAMIL
கொரோனா தொற்றால் இத்தாலியில் இரண்டாவது நபர் இன்று மரணம்!

கொரோனா தொற்றால் இத்தாலியில் இரண்டாவது நபர் இன்று மரணம்!


கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நோயாளியம் இத்தாலியில் இன்று உயிரிழந்தார்.

இன்று காலை 78 வயதாக இத்தாலிய பிரஜை ஒருவர் உயிரழந்ததைத் தொடர்ந்து இரண்டாவது மரணம் பதிவாகியுள்ளது.

பலியானவர் மிலனின் லோம்பார்டி பிராந்தியத்தில் வசிக்கும் பெண் என இத்தாலிய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இத்தாலியின் வட பிராந்தியத்தில் இதுவரை 30 பேர் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.

இத்தாலியின் நிதி மற்றும் தொழில்துறை மையமான லோம்பார்டியில் மட்டும் 27 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

வைரஸ் தொற்று வேகமாகப் பரவி உயிரழப்புக்களும் பதிவான நிலையில் வட பிராந்தியத்தில் பாடசாலைகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பொதுக் கூட்டங்கள், ஒன்றுகூடல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களை வீடுகளுக்கு இருக்குமாறு சுகாதாரத்துறையினர் கோரியுள்ளனர்.

கொரோனா தொற்று அச்சத்தால் சீனாவிலிருந்து அனைத்து நேரடி விமானங்களையும் நிறுத்தி வைத்த முதல் ஐரோப்பிய நாடு இத்தாலியாகும். இரு சீன சுற்றுலாப் பயணிகள் ரோமில் கொரோனா தொற்றுடன் கண்டறியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE