துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும் பெருமளவானோர் காயமடைந்தனர்.
40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட கட்டங்கள் சேதமடைந்துள்ளன. நூற்றுக்கணக்கான கட்டங்கள் இடிந்து விழுந்துள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் ஈரானினும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துருக்கியில் கடுமையான பனிப்பொழிவு, கடும் குளிரான காலநிலை நிலவிவரும் நிலையில் நில நடுக்கத்தால் வீடுகளை இழந்த மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் துரிதமாக இ;டம்பெற்று வருவதாக துருக்கி பேரிடம் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.