கனடா - ஒன்ராறியோவில் மாகாணத்தில் கொரோனா வைரஸ் வைரஸ் தொற்றுடன் மற்றொரு நோயாளி கண்டறியப்பட்டுள்ளார்.
இத்துடன் கனடாவில் இதுவரை 19 பேர் கொரோனோ வைரஸ் தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவற்றில் ஒன்ராறியோவில் ஆறு மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏழு நோயாளர்கள் உள்ளடங்குகின்றனர்.
ஜனவரி 25-ஆம் திகதி கொரோனோ தொற்று மையமான சீனாவின் வுஹானில் இருந்து ரொறன்ரோவுக்கு வந்த 50 வயதான ஒருவர் முதன்முதலில் கனடாவில் கொரோனோ தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.
ஜனவரி 26-ஆம் திகதி முதலில் வைரஸ் தொற்றுடன் கண்டறியப்பட்ட நோயாளியின் மனைவியும் தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து கொரோனோ தொற்று நோயாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் இதுவரை கனடாவில் தொற்றுடன் 19 பேர் கண்டறியப்பட்டனர்.
இதேவேளை, கனடாவில் கொரோனோ தொற்றுடன் கண்டறியப்பட்ட 19 பேரில் 13 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக கனடா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.