முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக பதவி ஏற்றுச் சென்றுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக மட்டக்களப்பைச் சேர்ந்த க.விமலநாதன் பதவி ஏற்கவுள்ளார்.
மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் பழையமாணவரான விமலநாதன் அம்பாறை மாவட்டச் செயலகத்தின் முன்னாள் மேலதிக அரச அதிபராக பணியாற்றியதுடன் சமூக நலனோம்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக பதவி வகித்துவந்திருந்தார்.
இந்நிலையில் நாளை முல்லைத்தீவு அரச செயலகத்தில் அவர் தனது கடமையினைப் பொறுப்பேற்பார் என்று தெரியவருகிறது.
அதேபோல அண்மையில் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபராக பதவி ஏற்ற மகேசனும் மட்டகளப்பை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.