நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி வடக்கு, கிழக்கில் போட்டியிடும் என்று கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
எனினும், கூட்டணியின் வேட்பாளர் நியமனங்கள் இதுவரை முற்றுப்பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது:-
"யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய தேர்தல் மாவட்டங்களில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி போட்டியிடவுள்ளது. திறமையான வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர்.
பெண்களுக்கான இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், யாழ்ப்பாணத்தில் அனந்தி சசிதரன் போட்டியிடுவார்.
வன்னியில் பெண் ஒருவர் போட்டியிடுவது தொடர்பில் பேசப்பட்டு வருகின்றது" - என்றார்.