Saturday 20th of April 2024 07:30:21 AM GMT

LANGUAGE - TAMIL
தமக்கொரு ஆசனம் கேட்டு மாவைக்கு  தமிழரசுக் கட்சி இளைஞரணி கடிதம்!

தமக்கொரு ஆசனம் கேட்டு மாவைக்கு தமிழரசுக் கட்சி இளைஞரணி கடிதம்!


எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் இளைஞர் அணியின் பங்குபற்றலையும் உறுதிப்படுத்துவதற்கு எமக்கும் ஒரு ஆசனத்தை ஒதுக்கித் தருமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞரணி கட்சித் தலைரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் 2020ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வெற்றி வேட்பாளர்களை தெரிவு செய்யும் கலந்துரையாடல் இடம்பெற்றிருக்கின்றது. ஆனாலும் இந்தக் கலந்துரையாடல்களில் இளைஞரணி சார்பில் எவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதை தங்களுக்கு நினைவுபடுத்திக் கொள்வதுடன் இது கட்சியினுடைய செயற்பாடுகளுக்கு ஆரோக்கியமானதாக இருக்காது எனவும் இணைஞரணி சுட்டிக்காட்டியுள்ளது.

இதுகுறித்து தமது தலைமைக்கு தமிழதரசுக் கட்சி இளைஞரணி செயலாளர் சுப்பிரமணியம் சுரேன் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

அந்தக் கடித்தில் குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாங்கள் எமது இளைஞர் அணி சார்பில் எமது இளைஞர் அணியினுடைய தலைவரும் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபருமான கிருஷ்ணபிள்ளளை சேயோன் அவர்களை ஏகமனதாக எதிர்வரும் 2020ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வைப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

எனவே இதற்குரிய தங்களுடைய காத்திரமான ஆலோசனைகளையும் முன்னெடுப்புக்களையும் மேற்கொள்ளுமாறு மிகுந்த பணிவுடன் வேண்டுகின்றேன்.

அத்துடன் எதிர்வரும் 2020ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தலில் எமது கட்சியை அமோகமாக வெல்ல வைப்பதற்கு எமது அணியினர் தயாராக உள்ளனர் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று சுரேன் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE