Saturday 20th of April 2024 07:22:33 AM GMT

LANGUAGE - TAMIL
டெல்லியில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த தடை!

டெல்லியில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த தடை!


இந்தியாவின் 12 மாநிலங்களுக்கு பரவி பெரும் அச்சுறுத்தலாக கொரோனா வைரஸ் மாறியுள்ள நிலையில் ஐ.பி.எல்.போட்டிகளை டெல்லியில் நடாத்த தடைவிதிப்பதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கருத்துத் தெரிவிக்கையில்,

மக்கள் கூடும் விதமாக நடைபெறும் அனைத்து கூட்டமைப்புகள், நிகழ்வுகள், மாநாடுகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்த மறு அறிவிப்பு வரும்வரை டெல்லியில் தடை விதிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மக்கள் கூட்டங்களை தவிர்ப்பது முதலாவது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.

எனவே தான் மக்கள் அதிகளவில் கூடும் ஐ.பி.எல். போன்ற விளையாட்டுப் போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மேலும் தெரிவித்திருந்தார் மணீஷ் சிசோடியா.


Category: விளையாட்டு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE