உலகளாவிய கொரோனா அச்சுறுத்தல் இந்தியாவெங்கும் வெகுவாக பாதிப்பினை ஏற்படுத்தி வரும் பின்னணியில் வரும் 29ம் திகதி தொடங்குவதாக இருந்த ஐ.பி.எல். தொடர் வரும் ஏப்ரல்-15 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை சற்று முன்னதாக அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் சௌரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா மற்றும் ஐ.பி.எல். நிர்வாகத்தினருக்கு இடையே இன்று நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலின் பின்னர் இம்முடிவு எடுக்கப்பட்டதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் சார்பில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: விளையாட்டு, பகுப்பு
Tags: