இந்தியா தென்னாபிரிக்க அணிகளுக்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்வதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியா மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி கடும் மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் நளை மற்றும் 18ம் திகதி நடைபெறவிருந்த 2வது மற்றும் 3வது ஒருநாள் போட்டிகள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பார்வையாளர்கள் இன்றி நடத்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தென் ஆபிரிக்காவுடனான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளும் ரத்து செய்யப்படுவதாக நேற்று மாலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
Category: விளையாட்டு, பகுப்பு
Tags: