Tuesday 23rd of April 2024 05:00:33 PM GMT

LANGUAGE - TAMIL
போர்க்கப்பல் மூலம் கொரோனா நோயாளிகளை நகா்த்தும் பிரான்ஸ்!

போர்க்கப்பல் மூலம் கொரோனா நோயாளிகளை நகா்த்தும் பிரான்ஸ்!


ஆபத்தான நிலையில் உள்ள கொரோனா வைரஸ் நோயாளிகளை கோர்சிகாவிலிருந்து நாட்டின் தென்கிழக்கில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்ற கடற்படை போர்க்கப்பலை பயன்படுத்தவுள்ளதாக பிரான்ஸ் ஆயுதப்படை அமைச்சர் புளோரன்ஸ் பார்லி இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

பிரான்ஸ் மத்திய தரைக்கடல் தீவான கோர்சிகாவில் 162 கொரோனா வைரஸ் தொற்று நோயாளா்கள் நேற்று வியாழக்கிழமை வரை உறுதிப்படுத்தப்பட்டனா்.

அங்கு ஆறு போ் இதுவரை உயிரிழந்துள்ளதுடன், மேலும் 6 போ் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனா்.

இந்நிலையில் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் முடிவின் பிரகாரம் நோயாளா்களை கையாழும் படுக்கை வசதிகளுடன் கூடிய போர்க் கப்பலை நோயாளா்களை நகா்த்துவதற்கு அனுப்பவுள்ளதாக பிரான்ஸ் ஆயுதப்படை அமைச்சர் புளோரன்ஸ் பார்லி தனது ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பின்தங்கிய பகுதிகளில் உள்ள நோயாளிகளை பெரிய மருத்துவமனைகளுக்கு மாற்றுவதன் மூலம் அவா்களின் மன அழுத்தத்தை குறைக்க பிரெஞ்சு அதிகாரிகள் தீா்மானித்துள்ளனா்.

இந்த வார ஆரம்பத்தில் கிழக்கு பிரான்சிலிருந்து மார்சேய் மற்றும் டூலோனில் உள்ள மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் இராணுவ விமானம் மூலம் மாற்றப்பட்டனர்.

இந்நிலையில் கோர்சிகா பகுதி நோயாளா்களை தெற்கு பிரான்ஸில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றுவதற்காக அங்கு போர்க்கப்பலை பிரான்ஸ் அனுப்பவுள்ளது.

இந்தப் போர்க்கப்பலில் 69 படுக்கைகள் உள்ளன என்று கடற்படை வலைத்தளம் தெரிவித்துள்ளது.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE