கனடா - ஒன்ராறியோ மாகாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி புதிதாக 50 போ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
அடையாளப் படுத்தப்பட்ட புதிய தொற்று நோயாளா்களுடன் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 308 ஆக உயா்ந்துள்ளது.
கொரோனா தொற்று ஆரம்பத்தில் இருந்து இதுவரை பதிவான தொற்று நோயாளா்களின் அதிகமான எண்ணிக்கை இதுவாகும்.
ஒன்ராறியோவில் தொற்றுக்குள்ளதாகி உறுதி செய்யப்பட்ட 308 பேரில் இருவா் உயிரிழந்தனா். ஐவா் குணமடைந்து வெளியேறியுள்ள நிலையில் தற்போது 301 போ் பாதிப்புக்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
ஒன்ராறியோவில் வியாழக்கிழமை 44 புதிய தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. 5,500 க்கும் மேற்பட்டவா்கள் தொற்று அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.
புதிதாக தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவா்கள் பாதி வரையானோர் வெளிநாட்டுத் தொடா்புடையவா்கள் மற்றும் ஏற்கனவே தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவா்களுடன் நெருங்கிய தொடா்புகளைப் பேணியவா் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.