Saturday 20th of April 2024 05:13:12 AM GMT

LANGUAGE - TAMIL
கொரோனா தொற்றுக்குள்ளான 72 பேரில் இருவரது நிலை மோசமாக உள்ளதாக தகவல்!

கொரோனா தொற்றுக்குள்ளான 72 பேரில் இருவரது நிலை மோசமாக உள்ளதாக தகவல்!


கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகள் இருவருக்கு நிமோனியா நிலைமை காணப்படுவதாகவும் அவர்களின் நிலைமை மிகவும் மோசமானதாக உள்ளது எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு கண்டறியப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை நேற்று இரவு 72 ஆக உயர்ந்துள்ளது.

நேற்றுமட்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 13 பேர் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

வைரஸ் பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 218 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான அறிகுறிகளால் அங்கொட ஐ.டி.எச் மருத்துவமனையில் பெரும்பாலான நோயாளிகள் உள்ளனர். இந்த மருத்துவமனையில் சந்தேகத்திற்கிடமான அறிகுறிகளுடன் 88 நோயாளிகள் உள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான 21 நோயாளிகள் பொலன்னறுவ பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் 12 பேரும், ராகமா போதனா வைத்தியசாலையில் 16 பேரும், அனுராதபுர போதனா வைத்தியசாலையில் 17 பேரும், கம்பா பொது மருத்துவமனையில் 19 பேரும், நீர்கொழும்பு பொது மருத்துவமனையில் 13 நோயாளிகளும் சிகிச்சை பெற்றுவருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE