Saturday 20th of April 2024 02:35:11 AM GMT

LANGUAGE - TAMIL
இத்தாலி, ஜோர்தான் சென்று திரும்பிய மேரி கோம்; தன்னைத்தானே தனிமைப்படுத்தினார்!

இத்தாலி, ஜோர்தான் சென்று திரும்பிய மேரி கோம்; தன்னைத்தானே தனிமைப்படுத்தினார்!


நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் தொடரின் குத்துச் சண்டை தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்று திரும்பிய இந்திய குத்துச் சண்டை வீராங்கைனை மேரி கோம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தன்னைத்தானே தனிமைப்படுத்தியுள்ளார்.

ஜோர்தான் தலைநகர் யேமனில் நடைபெற்ற தகுதிச் சுற்று போட்டிகளில் வெற்றிபெற்ற ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ள மேரி கோம் அதற்கு முன்னதாக இத்தாலியில் பயிற்சிகளை மேற்கொண்டிருந்தார்.

தற்போது சீனாவை விஞ்சி இத்தாலியில் கொரோனா பாதிப்பு விசுவரூபம் எடுத்துள்ள நிலையில் அங்கு பயிற்சியில் ஈடுபட்ட காரணத்தினால் தன்னைத்தானே தனிமைப்படுத்தியுள்ளதாக மேர் கோம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேரி கோம் கூறுகையில், சுமார் ஒரு மாதம் எனது குழந்தைகளிடம் இருந்து தனித்து இருந்த பின்னர் தற்போது நான் அமைதியாக இருக்கிறேன். எனது பயிற்சியை செய்து கொண்டிருக்கிறேன். எனது உடற்தகுதியில் அக்கறை எடுத்துக் கொண்டு குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறேன்.

நான் எதையும் பற்றி யோசிக்காமல் எனது குடும்பத்துடன் இருக்கிறேன். இதுதான் தனிமைப்படுத்தலின் சிறந்த பகுதி. என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், எவரும் பீதி அடைய வேண்டாம் என்பது தான். உங்களுடைய குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க முடியும் என்றால் முயற்சி செய்து உடன் இருங்கள்.

என்னைப் பொறுத்தவரைக்கும் தனிமைப்படுத்தியிருந்த நேரத்தில் சுதந்திரமாக இருந்ததாக உணர்கிறேன் என அவர் மேலும் கூறியுள்ளார்.


Category: விளையாட்டு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE