Tuesday 16th of April 2024 12:43:02 PM GMT

LANGUAGE - TAMIL
தொடரை ரத்து செய்ததற்காக இந்தியாவிற்கு தென்னாபிரிக்கா நன்றி!

தொடரை ரத்து செய்ததற்காக இந்தியாவிற்கு தென்னாபிரிக்கா நன்றி!


இந்திய-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடரை ரத்து செய்தமைக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை நன்றியைத் தெரிவித்துள்ளது.

கடந்த 12, 15 மற்றும் 18 ஆகிய திகதிகளில் இந்திய-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற ஏற்பாடாயிருந்தது. முதல் போட்டி கடுமையான மழைகாரணமாக கைவிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொடரை ரத்து செய்வதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை முடிவெடுத்திருந்தது.

இதையடுத்து தென்னாபிரிக்கா திரும்பிய அணி வீரர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு சுய தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொடரை ரத்து செய்தமைக்காக நன்றி தெரிவித்துள்ள தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் இடைக்கால தலைமை நிர்வாகி ஜேக்யூஸ் ஃபோல் கூறுகையில்,

எங்களது வீரர்களை உடனடியாக சொந்த நாடு திரும்புவதற்கு அனுமதித்த பிசிசிஐ க்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த முடிவை எடுப்பது எளிதானது அல்ல. இதனால் இந்தியாவுக்கு மிகப்பெரும் நிதி இழப்பு ஏற்பட்டிருக்கும்.

கடினமான நேரத்தை அவர்கள் புரிந்து கொண்டதற்காக நாங்கள் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். இந்த சூழ்நிலையில் வீரர்கள் முதலில் சொந்த நாடு திரும்பியுள்ளனர் என்று கூறியிருந்தார்.


Category: விளையாட்டு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE