Saturday 20th of April 2024 09:29:11 AM GMT

LANGUAGE - TAMIL
பிரான்ஸில் கொரோனாவுக்கு  முதல் மருத்துவா் பலியானார்!

பிரான்ஸில் கொரோனாவுக்கு முதல் மருத்துவா் பலியானார்!


பிரான்ஸ்லி்ல் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் கடமையில் ஈடுபட்டிருந்த மருத்துவா் ஒருவா் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டதாக பிரெஞ்சு சுகாதார அமைச்சர் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

இது நாட்டில் பதிவான மருத்துவர் ஒருவரின் முதல் மரணம் எனவும் அவா் தெரிவித்தார்.

மருத்துவமனையில் கடமையில் இருந்த ஒரு மருத்துவரின் மரணம் குறித்து எனக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது என சுகாதார அமைச்சர் ஆலிவர் வூரன் இன்று ஞாயிற்றுக்கிழமை பிரெஞ்சு தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.

மருத்துவா் மற்றும் அவரது குடும்பத்தினரின் தனியுரிமையைச் சுட்டிக்காட்டி இறந்த மருத்துவா் குறித்த கூடுதல் தகவல்களை வழங்க அமைச்சா் மறுத்துவிட்டார்.

எனினும் இறந்த மருத்துவர் பிரெஞ்சு ஓயிஸ் துறை - காம்பிஜினில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றினார் என ஆதாரங்களை மேற்கோளிட்டு ஏ.எப்.பி. இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வைரஸால் பெரிதும் பாதிக்கப்பட்ட பிரான்ஸ் பகுதிகளில் ஓயிஸூம் ஒன்றாகும்.

தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட பின்னா் வடக்கு பிரான்சின் லில்லிக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்ட பின்னர் மருத்துவர் இறந்தார்.

இதேவேளை, பிரான்ஸில் கடமையில் உள்ள மருத்துவர்கள் பலா் பிரெஞ்சு அரசாங்கத்தை பகிரங்கமாக விமர்சித்துள்ளனர்.

மருத்துவமனைகள் நிதி பற்றாக்குறையை எதிர்கொள்வதாக அவர்கள் கண்டனம் தெரிவித்தனா்.

மேலும் பாதுகாப்பு உடைகள், முக கவசங்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவுவதால் அவை இல்லாமலேயே பலா் பணியாற்றுகிறார்கள். இது நெருக்கடிகளை மேலும் அதிகமாக்கும் எனவும் அவா்கள் விமா்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. .


Category: உலகம், பகுப்பு
Tags: பிரான்சு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE