உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரர் விராட் கோலிதான் என மே.இந்தியத்தீவுகள் அணியின் முன்னாள் வீரர் சந்தர்போல் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டிக்காக இந்தியா சென்றிருந்த மே.இந்தியத்தீவுகள் அணியின் முன்னாள் வீரர் சந்தர்போல் இவ்வாறு புகழாரம் சூட்டியிருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய காலகட்டத்தில் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்று கேட்டால் விராட் கோலி என்று தான் நான் சொல்வேன். அதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. எனக்கு பிடித்தமான வீரரும் அவர்தான்.
அவர் தனது கிரிக்கெட் ஆட்டத்துக்காக கடினமாக உழைக்கிறார். அதை அவரது ஆட்டங்களில் காண முடிகிறது. மேலும் உடல் தகுதிக்கான தனி கவனம் செலுத்துகிறார். தன் விளையாட்டுத்திறனை மேம்படுத்துவதில் அதிக அக்கறை காட்டி வருகிறார்.
விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்று விரும்புபவர்களில் அவரும் ஒருவர். ஒவ்வொரு நாளும் அவர் தனது திறமையை நிரூபித்து வருகிறார். கடின உழைப்புக்காக அவரை பாராட்டியாக வேண்டும்.
விளையாட்டில் அவரைப்பேர் நீண்டகாலம் உச்சத்தில் இருப்பது எளிதான விடயம் அல்ல. அவரை போன்று விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் கடினமாக உழைக்க வேண்டியது அவசியமனதாகும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
Category: விளையாட்டு, பகுப்பு
Tags: