கொரோனா வைரஸூக்கு தமிழகத்தில் முதல் உயிரிழப்பு இன்று புதன்கிழமை அதிகாலை பதிவானது.
இன்று அதிகாலை வெளியிட்ட ருவிட்டா் செய்தியில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இதனைத் உறுதி செய்துள்ளார்.
இறந்த ஆண் நீண்ட காலமாக உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் அவருக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
எங்களின் கடும் போராட்டம் மற்றும் சிறந்த சிகிச்சையையும் மீறி அவர் உயிரிழந்துவிட்டார் எனவும் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இந்தியாவில் இதுவரை இந்த தொற்றால் 536 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 10 பேர் இறந்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நேற்று இரவு 12 மணி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மதுரையின் இன்று இறந்தவா் எந்த வெளிநாட்டுத் தொடா்புகளையும் கொண்டிராதவா் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சா் கூறியுள்ளார்.