Friday 29th of March 2024 09:05:24 AM GMT

LANGUAGE - TAMIL
பிரான்ஸில் நேற்று 240 போ் பலி  1,100 போ் இதுவரை உயிரிழந்தனா்!

பிரான்ஸில் நேற்று 240 போ் பலி 1,100 போ் இதுவரை உயிரிழந்தனா்!


பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 240 போ் நேற்று உயிரிழந்த நிலையில் இறப்பு எண்ணிக்கை 1,100 ஆக உயா்ந்துள்ளது.

அத்துடன் பிரான்சில் 22 ஆயிரத்து 300 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளாகி உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரெஞ்சு தலைமை சுகாதார அதிகாரி ஜெரோம் சொலமன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவா்களில் மொத்தம் 10 ஆயிரத்து 176 பேர் மருத்துவமனைகளில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2,516 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனா் எனவும் அவா் குறிப்பிட்டார்.

இதேவேளை, பிரான்ஸில் கடுமையான கொரோனா தொற்று அறிகுறிகளைக் கொண்டவா்கள் மட்டுமே பொதுவாக சோதிக்கப்படுகி்ன்றனா். இதனால் பாதிப்பு எண்ணிக்கை உத்தியோகபூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளவா்களை விட அதிகம் இருக்கும். ஆனால் அங்கு தொற்று நோய் பாதிப்பு குறைத்து மதிப்பிடப்படுவதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.

அத்துடன் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட 1,100 போ் மருத்துவமனைகளில் மட்டும் இறந்தவா்களின் தொகையே. வயதானவர்களின் வீடுகளில் காலமானவர்கள் இதில் உள்ளடங்கவில்லை என பிரெஞ்சு தலைமை சுகாதார அதிகாரி ஜெரோம் சொலமன் தெரிவித்தார்.

மருத்துவமனையின் இறப்புகள் மொத்த எண்ணிக்கையில் ஒரு பகுதி மட்டுமே. அடுத்த நாட்களில் வயதானவர்கள், வீடுகளில் இறந்தவா்கள் குறித்த தரவுகளை வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.


Category: உலகம், பகுப்பு
Tags: பிரான்சு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE