கனடா – ஒன்ராறியோ மாகாணத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 100 போ் உறுதிசெய்யப்பட்டுள்ளனா்.
புதிய நோயாளா்களுடன் ஒன்ராறியோவில் கொரோனா தொற்றுக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 688-ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தது முதல் கனடாவில் ஒரே நாளில் உறுதி செய்யப்பட்ட அதிகளவான தொற்று நோயாளா்களின் தொகை இதுவாகும்.
இதேவேளை ஒன்ராறியோவில் இதுவரை 9 போ் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனா்.
பல கனேடியர்கள் வெளிநாட்டிலிருந்து திரும்பி வருவதால் இந்த காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான புதிய தொற்றுக்கள் எதிர்பார்க்கப்படுகின்றன என்று மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஒன்ராறியோவில் பரிசோதிக்கப்பட்ட 10,000 க்கும் மேற்பட்டோர் இன்னும் முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் வைரஸ் மேலும் பரவுவதைத் தடுக்க அனைத்து அத்தியாவசியமற்ற பணியிடங்களையும் மூடுமாறு மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது.